வாஷிங்டன்:
பெற்ற தாயே, தனது நான்கு  குழந்தைகளை  கொலை செய்த சம்பவம்  அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு வீட்டில் வசித்து வந்த ஷென்த்தியா கார்ட்னர் (வயது 29 ) பெண்மணி, தனது குழந்தைகள் நான்கு பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் யாரோ ஒருவர் தகவல் தெரிவித்தார்.

கொலை நடந்த குடியிருப்பு
கொலை நடந்த குடியிருப்பு

உடனடியாக காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு  விரைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என நான்கு குழந்தைகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். அனைவரும் ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள்.
.விசாரணையில் அந்த குழந்தைகளின் தாயான ஷென்த்தியா கார்ட்னர்  கொலை செய்ததாக தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. கொலைக்கான காரணம் தெரியவில்லை.
பெற்ற தாயே தனது நான்கு குழந்தைகளைக் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.