டெல்லி: மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது.

இந் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மை இந்தியா பார்ட்டி என்ற கட்சிக்கு சிசிடிவி கேமிரா சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.