க்னோ

த்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடெங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இந்த பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் பலரும் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டு கொண்டுள்ளனர்.   இவ்ர்களில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் ஒருவர் ஆவார்.

அகிலேஷ் யாதவ்  மகள் டினாவுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டன.  இதையொட்டி டினாவுக்கு கொரோனா  பரிசோதனை நடந்துள்ளது.  இந்த பரிசோதனையில் டினாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.  டினாவுடன் அதிக தொடர்பில் இருந்தவர் அவர் தாய் டிம்பிள் யாதவ் ஆவார்.

எனவே டிம்பிள் யாதவ் தனது மாதிரியை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்.  இந்த பரிசோதனையில் டிம்பிளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  தாயும் மகளும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.  2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் டிம்பிள் யாதவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.