டில்லி

மெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வவ்வால் சடலம் இருந்ததால் தரையிறக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் நியூஜெர்சி நகருக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று விடியற்காலை 2.30 மணிக்குக் கிளம்பியது.   அந்த விமானத்தில் பல பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட  பலர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் கிளம்பி 30 நிமிடத்தில் பிசினஸ் கிளாசில் ஒரு வவ்வால் இறந்து கிடப்பது தெரிய வந்தது.  இந்நிகழ்வு விமானப்பணிகள் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதையொட்டி விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்குத் தகவல் அளித்தனர்.,

விமானி உடனடியாக பறந்து கொண்டிருந்த விமானத்தை திருப்பி டில்லி விமானத்தில் தரை இறக்கி உள்ளார்.  விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு உயிரிழந்து கிடந்த வவ்வால் அகற்றப்பட்டுள்ளது.

வேறொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பயணிகள் அனைவரும் நியு ஜெர்சிக்கு அனுப்பப்பட்டனர்.   பறந்து கொண்டிருந்த விமானத்தில் வவ்வால் உயிரிழந்து கிடந்தது எப்படி என்பது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.