டில்லி

யங்கரவாத தாக்குதலால் இஸ்ரேலில் ஏர் இந்தியா விமானச் சேவை  ரத்து செய்யப்பட்டுள்ளது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்று நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திடீர் ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது. மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. டில்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வாரந்தோறும் 5 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது.

நேற்று டில்லியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு நேற்று இயக்க வேண்டிய AI139 என்ற எண் கொண்ட விமானம் ரத்து செய்யப்பட்டது.  மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி வர வேண்டிய AI140 விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

விமானப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.