சென்னை: பெரும் பரபரப்பு இடையில் இன்று நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு மேடையில், எடப்பாடியின் ஆதரவாளர் ஒருவர் பன்னீர் ரோஜாக்களைக் கொண்டு தொடக்கப்பட்ட அழகிய மாலையை  அணிவிக்க முயற்சித்தார். இதைக்கண்டு கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி, மாலையை தட்டி விட்டதுடன், அந்த தொண்டரை வசைபாடினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.வந்த தொண்டர் ஒருவரை எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  இன்று நடைபெற்றது.  ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை பொதுக்குழு கூட்டத்தில் எழுந்த நிலையில் சுமார் 1மணி நேரத்திற்குள் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது. எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றாமல், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.  இதை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

அதிமுக பொதுக்குழு சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை  முக்கிய நிர்வாகிகள் மேடையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன்,  அவருக்கு வெள்ளி செங்கோல், கிரீடம் அணிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர்  பன்னீர் ரோஜா மாலையை அணிவிக்க முயற்சித்தார். இதைக்கண்ட  எடப்பாடி பழனிசாமி அந்த மாலையை தள்ளி விட்டதுடன் கொஞ்சம் நேரம் இருங்கப்பா  என்று கடுப்பாக கத்தினார்.  மேலும் அவருக்கு கொடுக்கப்பட்ட பூங்கொத்தையும் புறந்தள்ளி விட்டார். இதனால் மேடையில்  சற்று சலசலப்பு ஏற்பட்டது.