சென்னை:
குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள் அதிமுக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 2021ம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், குறைவான தொகுதிகள் பெற்றதால் எங்கள் பலம் குறையாது என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், வன்னியர் இடஒதுக்கீட்டை அறிவித்ததால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.