கமதாபாத்

ன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது/

 

கடந்த 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், விபத்துக்குள்ளாகி இந்த விமான விபத்தில் 270 பேர் பலியாகினர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்படுவது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விபத்துக்குள்ளான விமானம் பயணித்த அதே வழித்தடத்தில் செல்ல இருந்த மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

இவ்வாறு கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

[youtube-feed feed=1]