டெல்லி: வரும் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி  தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரு அவைகளின்  கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், வணிக நிறுவன பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து பட்ஜெட் தயார் செய்து வருகிறார்.  இந்த பட்ஜெட் பிப்ரவரி  1–ந்தேதி பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பொதுவாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன், நம்பகத்தனமான அதிகாரிகளை கொண்டு தயாரிக்கப்படும். இதுதொடர்பாக நிதித்துறை அலுவலக அதிகாரிகளுக்கு  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால், அதையும்மீறி, பட்ஜெட் உரையின் சில பகுதிகள் பாகிஸ்தானுக்கு கசியவிடப்பட்ட தகவல் வெளியானது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர் மூலமாகவே பாகிஸ்தானுக்கு ‘லீக்’ ஆகியுள்ளது தெரிய வந்தது. இந்த தேச விரோத செயலில் ஈடுபட்டது, நிதித்துறையைச் சேர்ந்ரத அதிகாரி சுமித் என்பவர்  என கண்டுபிடிக்கப்பட்டது.  இவர்,, வாட்ஸ் அப் வாயிலாக பட்ஜெட் அறிக்கையின் சில பகுதிகளை பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்துள்ளளார். இதற்காக அவர் சிலரிடம் பணம் வாங்கி உள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து,   அவர் பயன்படுத்திய மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சுமித் மீது குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வேறு ஏதேனும் அரசு தொடர்பான ரகசிய தகவல்களை அவர் வெளிநாடுகளுக்கு பகிர்ந்துள்ளாரா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமித் உடன் பணியாற்றும் மற்ற ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சுமித்தின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக டெல்லி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் டேட்டா ஆபரேட்டராக பணிபுரியும் சுமித் என்ற ஒப்பந்த ஊழியர் உளவு நெட்வொர்க்குடன் இணைந்து கைது செய்யப்பட்டு உள்ளார். பணத்தை வாங்கி கொண்டு நிதி அமைச்சகத்தின் தகவல்களை கசியவிட்டு, வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் முர்முவின் உரையுடன் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! பாராளுமன்ற செயலர் அறிவிப்பு…