சென்னை

றைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.  அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,

“பசிப்பிணி ஒழிப்பு – உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்”

என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உலகம் போற்றும் விஞ்ஞானியாகச் சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.