புதுடெல்லி:
க்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர், 12க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திட்டம் இளைஞர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டது என மத்தியஅரசும், ராணுவ தளபதி உள்பட பலர் ஆதரவு தெரிவித்தாலும், இளைஞர்கள் மத்தியில் தங்களது ராணுவ வீரருக்கான கனவை பொய்யாக்குவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அதற்கான வயது வரம்பை 23ஆக உயர்த்தி மத்தியஅரசு அறிவித்தது. இருந்தாலும் போராட்டம் குறைய வில்லை.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.