குருகிராம்

ரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த ஊர்வலக் குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிப் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது.

ஊர்வலம் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.

இதையொட்டி இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்து இரு தரப்பும் கற்களை வீசி தாக்கினர். தாக்குதலில் காவல்துறையினர் உள்படப் பலர் காயமடைந்தனர்.

ஏராளமானோர் வன்முறையில் இருந்து தப்புவதற்காக ஏராளமானோர் அருகில் உள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

வன்முறையாளர்கள் காவல்துறையின் வாகனங்கள் உள்படப் பல வாகனங்களுக்கு தீ வைத்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில்,

நேற்றைய கலவரத்தில் வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த நிலையில், இன்றும் உணவகம், கடைகள் மீது மர்ம கும்பல் தீ வைத்துள்ளது.  தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வதந்தி பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தில் நாளை வரை இணையதள முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.