டாக்கா

டந்து முடிந்த வங்காள தேச பொதுத் தேர்தலில் மீண்டும் ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார்.

வங்காள தேசத்தில் உள்ள மொத்தம் 350 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். நேற்று 299 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. வேட்பாளர் மரணத்தால் ஒரு தொகுதிக்குப் பின்னர் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வங்காள தேசத் தேர்தலில் 436 சுயேச்சை வேட்பாளர் உள்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கருத்துக் கணிப்புகள் இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் எனத் தெரிவித்தன.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா நகரக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியுடன் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு நிறைவடைந்து. வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.  பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார்.

ஷேக் ஹசீனா கோபால்கஞ்ச்-3 தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா 2 லட்சத்து 49 ஆயிரத்து 965 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வங்காள தேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

முடிவுகளை கோபால்கஞ்ச் துணை ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான காசிமஹ்புபுல் ஆலம் அறிவித்தார். ஹசீனா இந்த தொகுதியில் இருந்து 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே ஷேக் ஹசீனா மீண்டும் பீரதமராக உள்ளார்.  இன்று  முழுமையான முடிவுகள் வெளியாகும் என வங்காள தேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.