பாட்னா

நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை மீண்டும்  சந்தித்துப் பேசி உள்ளார்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பெரும் பங்காற்றி உள்ளார்.  இந்தியா கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளு உள்ளன.  இந்த கூட்டணி அமைப்பில் நிதிஷ்குமாருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மிகவும் உதவி உள்ளது.

பாட்னா நகரின் அனே மார்க்கில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் நேற்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. இவ்விரு தலைவர்களும் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அடிக்கடி இவர்கள் சந்தித்துப் பேசுவது அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களை ஏற்படுத்தி உள்ளன.