காபூல்

ன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்

நேற்று மதியம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது.  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது,

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 241 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்தியாவில் டில்லி உள்ளிட வ்ட மாநிலங்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தன. தலைநகர் டில்லியில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. மேலும் காஷ்மீரிலும், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இன்று அதிகாலை 4.51 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குக் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

இவ்வாறு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர்.