மாலி: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில், 9 குழந்தைகள் பிறந்துள்ளதானது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.

ஹலிமா சிஸ்ஸின் என்ற பெயருடைய 25 வயது பெண்ணிற்குதான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவர், கர்ப்பமாக இருந்தபோதே, இவரின் வயிற்றில் 7 குழந்தைகள் வரை இருக்கலாம் என்பதை கணித்தனர் மருத்துவர்கள்.

எனவே, இவருக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. இதனால், மாலி நாட்டிலிருந்து, மொரோக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்தப் பெண். சிறப்பு கண்காணிப்பிலிருந்த இப்பெண்ணுக்கு, பிரசவமானபோது, கணிப்பையும் மீறி, மொத்தம் 9 குழந்தைகள் பிறந்தன.

இவர்களுள், 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள். இவர்கள், அனைவரும் சிசேரியன் முறையில் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், தாயும், அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.