ஆப்கானிஸ்தான்:
ப்கானிஸ்தான் ராணுவம் வான்வழியாக தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில் அன்று நடத்தியுள்ளது ராணுவம். இதனை ராணுவமும் உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கைவசம் இருந்த ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. அதோடு பல பயங்கரவாதிகள் காயம்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் கடந்த மே 1 முதல் அமெரிக்க ராணுவம் தனது படை வீரர்களை திரும்ப பெற்று வருகிறது. அதையடுத்து தலிபான் பயங்கரவாதிகளின் கை ஓங்கிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தலிபான் பயங்கரவாதிகள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் உள்ளனர்.