சென்னை

ளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். 

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல் நிலைய காவலர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் ஆளுநரின் செயலாளர் கிரிலோஷ் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாகச் சென்னை வேப்பேரியில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவர்,

“இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த பெட்ரோல் குண்டு வீசிய வினோத் மதுபோதையில் இருந்துள்ளார். குண்டு வீச்சு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.   ஏற்கனவே வினோத் மீது \ 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன”

என்று விளக்கம் அளித்துள்ளார்.