பெங்களூரு

டிகை சுமலதா மாண்டியா தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக வந்த செய்தியால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நடிகை சுமலதா கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் கடந்த தேர்தலில் இவர். பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். என்பதால் வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  தற்போது மண்டியா தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

எனவே நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவார் எனச் செய்திகள் வெளியாகி பாஜகவில் கடும் சர்ச்சை ஏற்பட்டது  இந்நிலையில் இன்று  நடிகை சுமலதா தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரு வில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

பிறகு சுமலதா செய்தியாளர்களிடம்,

”நான் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதாக உறுதியளித்துள்ளனர். நடிகர் தர்ஷன் கடந்த தேர்தலில் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவர் இப்போதும் எங்களுடன் இருப்பதாக  கூறியுள்ளார். நான் சட்டசபைத் தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். 

தற்போது மண்டியா தொகுதியில் பாஜகவுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது   எனவே மண்டியா தொகுதி விஷயத்தில் பாஜக தலைவர்கள் உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள். இதுவரை நான் மாண்டியாவில் சுயேச்சையாகப் போட்டியிடுவது குறித்துச் சிந்திக்கவில்லை”

என்று கூறினார்.