தராபாத்

பிரபல நடிகை கவிதா இரண்டு வாரம் முன்பு கொரோனாவால் தனது மகனை இழந்த நிலையில் இன்று அவர் கணவரும் இறந்துள்ளார்.

மூத்த நடிகையான கவிதா பல தமிழ் மற்றும் தெலுங்கு  படங்களில் நடித்துள்ளார்.   மேலும் அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.   தமிழில் ஓ மஞ்சு என்னும் படத்தின் மூலம் அறிமுகமான கவிதா அதன்பிறகு பல படங்களில் நடித்து சமீபகாலமாகக் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா முதல் அலை தொடங்கியதில் இருந்தே இவர் படப்பிடிப்புக்களில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார்.  இந்நிலையில் இரண்டாம் அலை தொடங்கி ஐதராபாத் நகரில் பலருக்கும் பாதிப்பு உண்டானது.  அவ்வகையில் கவிதாவின் மகன் சாய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவரும் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.  ஆயினும் கடந்த ஜூன் 15 ஆம் தேதி அன்று கவிதாவின் மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  இந்த துக்கம் மாறும் முன்பே நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜ் இன்று காலை மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். 

 இரண்டே வார இடைவெளியில் மகனையும் கணவரையும் அடுத்தடுத்த இழந்த கவிதாவின் நிலை திரையுலகைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.