ண்டி

ன்று மண்டி தொகுதியில் நடிகை கங்கணா ரணாவ்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வருட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இத்துடன் இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இன்று இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் இன்று வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.