தராபாத்

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணின் ஜன சேவா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும் தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாண் ஜன சேனா என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிதி திரட்டுவதில் பவன் கல்யாண் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில்  தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது தம்பி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.  சிரஞ்சீவி படப்பிடிப்பில் இருந்த போது அங்குச் சென்று பவன் கல்யாண் சந்தித்துள்ளார்

அந்த நேரடி சந்திப்பின் போது ரூ.5 கோடிக்கான காசோலையைச் சிரஞ்சீவி பவன் கல்யாணிடம் வழங்கி உள்ளார். அப்போது பவன் கல்யாண் தனது கட்சி நிர்வாகிகளுடன் சிரஞ்சீவியிடம் ஆசி பெற்றார்.