சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்த வீராச்சாமி, முத்துலாபுரம் நடராஜன், ஆமத்தூர் புது ராஜா உள்ளிட்ட 4 பேர் 100 சதவீத காயமடைந்தனர்.

அவர்கள் 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. 4 பேருக்கும் தீக்காயம் அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக  மதுரைக்கு அழைத்து செல்லப்படலாம் என்று தெரிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் 5வது வெடி விபத்து இதுவாகும். ஒரு மாதத்தில் நடைபெற்ற விபத்தில் இதுவரை 31 பேர் உயிழந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.