மும்பை:

தேசபக்தி படங்களுக்கு அபிநந்தன், பாலகோட், புல்வாமா போன்ற பெயர்களை பதிவு செய்ய இந்தி திரைப்பட தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


புல்வாமா தாக்குதலில் நம் வீரர்கள் 40 பேர் இறந்தது, இந்திய விமானப் படை தீவிரவாதிகள் முகாமை பாகிஸ்தானுக்கு சென்றே அழித்தது,விமானப்படையைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கியது போன்ற செய்திகள் இன்று பேசும் பொருட்களாகிக் கொண்டிருக்கிறது.

போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளதாலும் சற்று பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் முப்படைகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தி திரைப்படங்களுக்கு புல்வாமா, சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ் 2.0, அபிநந்தன் ஆகிய பெயர்களை பதிவு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது.