ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 35ல் இருந்து ரூ. 38 ஆகவும் எருமைப்பாலின் விலை ரூ. 44ல் இருந்து ரூ. 47 ஆகவும் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வு வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியிருப்பதை அடுத்து பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel