பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் நிலையில் நேற்று அதிலிருந்து சனம் வெளியேறினார்.

நான் பலமுறை வீட்டில் இருப்பவர்களிடம் தனித்துவமாக விளையாடுங்கள் என்று கூறினேன். ஆனால் அதை சரியாக செய்தது நீங்கள் ஒருவரே என்று தெரிவித்த கமல், இந்த வெற்றியை நீங்கள் வெளியிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தலைவர் போட்டி நடைபெறுகிறது. இந்த முறை வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவித்தார் பிக்பாஸ். அதன் நடந்த போட்டியில் பிக்பாஸின் கேள்விக்கு சரியான பதிலை கூறிய அனிதாவை தூக்கி கொண்டாடினர் ஹவுஸ்மேட்ஸ்.

வாயை கூட திறக்காமல் மௌனம் காக்கும் போட்டியாளர்கள் பலர் இருக்கும் நிலையில் போட்டியை சிறப்பாக விளையாடிய சனம் வெளியேற்றப்பட்டது ஏன் என விவாதமும் பிக் பாஸ் வீட்டில் தொடங்கி இருக்கிறது.

சனம் வெளியேற்றப்பட்டது பற்றி அனிதா, ஆரி உள்ளிட்டவர்கள் பேசி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்திக்கிட்டு விளையாடுகிறார்கள். அவங்க (அர்ச்சனா கேங்) எல்லாம் உள்ள இருக்காங்க. Individual ஆக விளையாடும் நபர்கள் வெளியே போயிட்டே இருக்காங்க’ என ஆரி விரக்தியுடன் கூறுகிறார் .