டெல்லி
டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆம் அத்மி கட்சியினர் கூறி உள்ளனர்\.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில்,
“பாஜக அரசு, அம்பேத்கரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளது. இது சரியல்ல. இது அம்பேத்கரின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு எனது வேண்டுகோள், நீங்கள் பிரதமர் புகைப்படத்தை வைக்கலாம், ஆனால் தயவுசெய்து அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றாதீர்கள்”
என்று பதிவிட்டிருந்தார்.
மற்றொரு முன்னாள் முதல்வர் அதிஷி எக்ஸ் தளத்தில்,
“பாஜக தனது உண்மையான பட்டியலின மக்கள் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தைக் காட்டியுள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன”
என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா,
“ அரசாங்கத் தலைவர்களின் புகைப்படம் வைக்கப்பட, வேண்டாமா? குடியரசுத் தலைவர் புகைப்படம் வைக்கப்பட வேண்டாமா? தேசப்பிதா காந்தியின் புகைப்படம் வைக்கப்பட வேண்டாமா? பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் நாட்டின் மரியாதைக்குரிய ஆளுமைகள் மற்றும் எங்கள் வழிகாட்டிகள்.
இந்த அறை டெல்லி முதலமைச்சரின் அறை. அதனால் அரசாங்கத்தின் தலைவராக, நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு பதிலளிப்பது எனது வேலை அல்ல. நான் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்”
என்று பதில் அளித்த்ள்ளார்.