டில்லி,

தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆம்ஆத்மி கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கடும் தோல்வியை கண்டது. இந்த தோல்விக்குக் காரணம் ஆம் ஆத்மி கட்சியில் நடைபெற்று வரும்  ஊழலே காரணம்  என அக்கட்சியின் எம்எல்ஏ. குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்களை சீர்செய்ய கட்சித் தலைமை முன்வர வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏ குமார் விஸ்வாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மிக்கு பெரும் தோல்வியே ஏற்பட்டது. இதற்கு கட்சி மீது பல ஊழல் புகார்கள் எழுந்துள்ளதும் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக.,வின் சதியே காரணம் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அக்கட்சி எம்எல்ஏ.,வாக உள்ள குமார் விஸ்வாஸ் கூறுகையில், பாஜக.,வின் சதியை விட, ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் மலிந்து வருவதே தோல்விக்குக் காரணம். கட்சியிலும், ஆட்சியிலும் நிலவும் ஊழலை சீர்செய்ய வேண்டும் என கூறினார்.

இதன் காரணமாக கெஜ்ரிவால் மற்றும் விஸ்வாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கெஜ்ரிவால் தரப்பினர், குமார் விஸ்வாஸ், பாஜக.,வின் எடுபிடியாகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்து உள்ளனர்.

ஆம்ஆத்மி ஆரம்பித்த காலத்தில் விஷ்வாஸ் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் என்பது நினைவில் கூறத்தக்கது.

இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருவதும், அவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர்  பேசி வருவதும்  ஆம் ஆத்மி கட்சி இரண்டாக உடையும்  சூழலை உருவாக்கி வருவதாக டில்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.