டில்லி

ர் இந்தியா பணி மேலாளருடன் நடந்த வாய்த் தகராறில் ஒரு பெண் பயணி அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

அகமதாபாத் நகருக்குச் செல்ல வேண்டிய ஒரு பெண் பயணி தாமதமாக விமானநிலையத்துக்கு வந்துள்ளார்.  அவரை கவுண்டரில் இருந்த பெண் ஊழியர் நேரம் கடந்து விட்டதால் அனுமதிக்க மறுத்துள்ளார்.  அவர் தகராறு செய்யவே அவரை அந்தப் பெண் ஊழியர் தனது பணி மேலாளரிடம் அனுப்பி வைத்துள்ளார்.  அங்கு  பெண் பயணி கடுமையாக சத்தம் போட்டுள்ளார்.

மேலாளருக்கும் பெண் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  திடீரென அந்தப் பெண் மேலாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.   கோபம் அடைந்த மேலாளர் பதிலுக்கு அந்தப் பயணியின் கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.  உடனே அந்தப் பெண் இது குறித்து காவல் துறையை அணுகி உள்ளார்.  போலீசார் இருவரிடையும் பேசி சமரசம் செய்து வைத்துள்ளனர்.   போலீசாரின் தலையீட்டால் பெரும் பிரச்னை தவிக்கப் பட்டுள்ளது.