நெல்லை:
ருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 108 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 74 பேரும், கோவை மாவட்டத்தில் 43 பேரும், சேலம் மாவட்டத்தில் 38 பேரும், மதுரை மாவட்டத்தில் 26 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 23 பேரும், திருச்சி மாவட்டத்தில் 21 பேரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 196 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 204 பேருக்கும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது.