டில்லி

ன்லைன் மூலம் சிறப்பு ரெயில்கள் மற்றும் ஒரு முழு ரெயில் பெட்டியை முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை வழக்கமாக இயக்கி வருகிறது.  சுற்றுலா உள்ளிட்ட பலவற்றுக்கும் இந்த சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு மொத்தமாக இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றது.  இதன் மூலம் ஒரு முழுப் பெட்டியில் உள்ள அனைத்து டிக்கட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்  இதற்காக விண்ணப்பம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளை நேரடியாக அணுகி அவர்கள் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுரை இருந்து வருகிறது.

தற்போது இதற்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.   இதன் மூலம் சிறப்பு ரெயில் முழுவதும் அல்லது ஒரு முழுப்பெட்டியில் உள்ள அனைத்து இருக்கைகளையும்  ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.   இந்த வசதியைப் பெற பெட்டி ஒன்றுக்கு டிபாசிட்டாக ரூ.56000 செலுத்த வேண்டும்.    அத்துடன் ரெயில்வே அதிகாரிகளின் ஒப்புதலும் தேவை.   இவ்வாறி அந்த புதிய நடைமுறையில் குறிப்பிடப் பட்டுள்ளது