பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட எச்.ராஜா, கடும் எதிர்ப்பு காரணமாக அந்தப் பதிவை நீக்கினார்.

ஆனாலும் அவருக்கு கண்டனங்கள் குவிகின்றன.

இந்த கமல் ட்விட் என்று ஒரு பதிவு சமூகவலைதளங்களில் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

அந்த பதிவில், “பகுத்தறிவென்பது சிமெண்டால் செய்யப்பட்ட சிலையினுள் மட்டுமே அடங்கிவிடுவதல்ல. மனக்குகையில் எழுந்த சிறுத்தை மதக்குப்பைகளை ஒரு நூறாண்டு கடந்து இன்றும்கூட கலங்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது பெரியார், இச்சிறியோருக்கு என்றுமே எட்டாதவர். இவ்விழிமாந்தரின் மூளைக்கு அப்பாற்பட்டவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வார்த்தைகள் கமல் ஸ்டைலில் (!) இருக்கவே, பலரும் இதை கமல் ட்விட் என்றே நினைத்தனர்.

ஆனால் இது  கரடி என்ற பெயரில் ட்விட்டரில் எழுதும் நபர் பதிவிட்டது இது என்பது தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன், கவிதை (!) ஒன்றும் இதே போல் வர.. பிறகு அது தனது கவிதையல்ல என்று கமல் மறுத்தது குறிப்பிடத்தக்கது.