
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணாக்கர்களின் படிப்பு கடந்த 4 மாதங்களாக தடைபட்டுள்ளது. பல வகுப்புகளுக்கு தேர்வு இல்லாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுவிட்டது,.
தமிழகத்தில், பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையை (Group) மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், பழைய பாடத்தொகுப்பே இந்த கல்வி ஆண்டிலும் தொடரும் என தமிழகஅரசு தெரிவித்து உள்து.
பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை இடம்பிடித்திருந்தது. பழைய முறையில் 6 பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத்தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பிடித்திருந்தது.
