2017-ம் ஆண்டு ‘ப.பாண்டி’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ்.

‘ப.பாண்டி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ். அதில் ராஜ்கிரண் மற்றும் கவுண்டமனியை நடிக்க வைக்கலாம் என்பது தான் தனுஷ் ஆசையாக இருந்திருக்கிறது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு, இந்திப் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, ‘ப.பாண்டி 2’ படத்தைக் கண்டிப்பாக இயக்குவார் என்று தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.