
ரஜினிகாந்த், எது பேசினாலும் அது மிகப்பெரிய சர்ச்சையாகி விடுகிறது. அதேபோல்,அவர் குடும்பத்தினர் எது செய்தாலும் அது வைரலாகிவிடுகிறது .
சமீபத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்குப் பின் திரைப்படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வரும் செளந்தர்யா தற்போது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘குயின்’ வெப் சீரிஸாக தயாரித்த எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனம் தான் இதையும் தயாரிக்க உள்ளதாம்.
Patrikai.com official YouTube Channel