சென்னை:

மிழகத்தை சேர்ந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவரான ரத்தினவேல்பாண்டியன் இளம் வயதில் நெல்லையில் வழக்கறிஞர் பணியை தொடங்கி, பின்னர் மாவட்ட நீதிபதி, உயர்நீதி மன்ற நீதியாக பணியாற்றி பின்னர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தற்போது 90 வயதாகும் ரத்தினவேல் பாண்டியன் வயது முதிர்வு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.