டெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

மாணவர் தற்கொலைக்கு ராகிங் கொடுமையா? அல்லது குடும்ப சூழலா ? என்பது உடனடியாக தெரியவில்லை. டெல்லி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.