
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களின் ஒருவராக இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ஹிட்டானது.
மிருதன் படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் “டிக் டிக் டிக்”. தற்போது இப்படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவலை ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ”நானும் எனது மகன் ஆரோவும் ஒரே காட்சியில் நடித்துள்ளோம். இது என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள். கடவுள் அவனை ஆசீர்வதிக்கப்பட்டும்.” என கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel