குஜராத் லையன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது. பஞ்சாபில் நேற்று IPL 2016 மூன்றாவது போட்டி குஜராத் லையன்ஸ் அணிக்கும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.
டாஸ் வென்று குஜராத் லையன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரைனா பில்டிங் செய்ய முடிவுசெய்தார். குஜராத் லையன்ஸின் அசத்தலான பந்து வீச்சில், கிங்ஸ் XI பஞ்சாப் 20 ஓவரில் ஆறு விக்கெட்களை இழந்து 161 ரன்கள் எடுத்தது.

இந்த இலக்கை குஜராத் லையன்ஸ் அணி 17.4 ஓவரில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 162 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.
கிங்ஸ் XI பஞ்சாப் 161-6 (முரளி விஜய் 42, மணன் வோஹ்ற 38, டுவைன் பிராவோ 4-22)
குஜராத் லையன்ஸ் – 162-5, 17.4 ஓவர்களில் (ஆரோன் பிஞ் 74, தினேஷ் கார்த்திக் 41*, சந்தீப் ஷர்மா 1-21)
Patrikai.com official YouTube Channel