டெல்லி: தலைநகர் டெல்லியில் தலித் இளம்பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற வலியுறுத்தி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
தலைநகர் டெல்லியில் இளம்பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற வலியுறுத்தி கூட்டுபாலியல் வன்கொடுமை அரங்கேறி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவன் இந்து என கூறி காதலித்து, அந்த இளம்பெண்ணை மதமாற்ற செய்ய கும்லுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது லவ் ஜிகாத் என்று குற்றம் சாட்டப்பட்டுளளது.

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த நபரின் பெயர் பாஹீம் என்று பின்னர் அப்பெண் தெரிந்து கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள சாஹில் வீட்டிற்கு அப்பெண் சென்றார். அங்கு சாஹிலும் அவரது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினர். அப்பெண்ணை மீரட்டிற்கு அழைத்து சென்று அங்கும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதையடுத்து அப்பெண் இது குறித்து டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சாஹில் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
வழக்கின் விவரம்:
டெல்லியில் சமீபத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், தற்போது 23 வயதான தலித் இளம்பெண் ஒருவர் டெல்லி ‘பாட்லா ஹவுஸ் அருகே பல ஆண்கள் என்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்; இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி என்னை வற்புறுத்தினர்’என காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், தன்னை கூட்டுபாலியல்வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியநபர் பெயர் ‘சஹில்’ என்றும், சமூக வலைதளம் மூலம் அவரது அறிமுகம் கிடைத்ததாக தெரிவித்ததுடன், தான் ஒரு வசதிமிக்க இந்து குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவனது உண்மையான பெயர் ‘ஃபஹீம்’ என்பதைத் தான் கண்டறிந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்படி, 2021-ஆம் ஆண்டில் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு நபருடன் அந்தப் பெண்ணுக்கு முதன்முதலில் அறிமுகம் ஏற்பட்டது. 2022-ஆம் ஆண்டில், தான் ‘பாட்லா ஹவுஸ்’ (Batla House) பகுதிக்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு பல நபர்களால் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் காணொளிகள், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் அந்தக் காணொளிகளைப் பயன்படுத்தி அவரை மிரட்டியதாகவும், மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும் News18 செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் தான் மீரட் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கும் தான் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது புகாரில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, இஸ்லாம் மதத்திற்கு மாற வலியுறுத்தியதாகவும், அப்போது, ஃபஹீம் என்பவரும் அவரது உறவினர்கள் சிலரும் இருந்தனர் என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என்னை மிரட்டுவதற்காக அவன் என் மீது ரத்தத்தை ஊற்றுவான். என்னை அச்சுறுத்துவதற்காக என் மீது விலங்கு இறைச்சியை வீசுவான்,” என்று அந்தப் பெண் கூறியதாக News18 செய்தி வெளியிட்டுள்ளது.
தஸ்லீம் மௌல்வி என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் தன்னைத் துன்புறுத்தியதாகவும், மதம் மாறுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் அந்தப் பெண் மேலும் குற்றம் சாட்டினார்.
முதல் தாக்குதல் சம்பவம் ‘பாட்லா ஹவுஸ்’ பகுதியில் நடைபெற்றதால், ஜாமியா நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பதை தென்கிழக்கு டெல்லி காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதுவரை நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக News18 அறிக்கை கூறுகிறது.
அந்த FIR-இன் படி, ஃபஹீம் என்பவர் முன்னதாக 2025-ஆம் ஆண்டில் குருகிராம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இருப்பதாகக் கருதப்பட்ட அவரது அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. அந்தத் தரவுகள் இனி வெளியே கசியாது என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்தார். இருப்பினும், பின்னர் ஃபஹீம் மண்டோலி சிறையிலிருந்து தன்னைத் தொடர்புகொண்டதாகவும், துபாயை மையமாகக் கொண்ட ஒரு அலைபேசி எண்ணிலிருந்து தனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
[youtube-feed feed=1]