ஸ்ரீநகர்: “ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று,  பஹல்காம் தாக்குதலின் முதலாண்டு நினைவு தினத்தையட்டி,  ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா   தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு (2025)  ஏப். 22 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் ,  ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜம்மு – காஷ்மீரைத் துயரங்களில் இருந்தும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதிலும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களால் இயன்ற அனைத்தும் செய்து வருகிறோம்.

கடந்தாண்டு நடைபெற்ற கோழைத்தனமான தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் ஒற்றுமயுடன் துணை நிற்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்.”

இவவாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]