சென்னை: ரம்ஜான் மற்றும் வார விடுமுறையையொட்டி,  கூட்ட நெரிசல் தவிர்க்க 1,774 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ரம்ஜான் உள்பட தொடர்ச்சியான பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி ஓய்வு காரணமாக, மாநிலம் முழுவதும் ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை உயரும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அரசு போக்குவரத்து துறை கூடுதல் ஏற்பாடுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதன் அடிப்படையில், வழக்கமான சேவைகளுக்கு மேலாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மார்ச் 18, 19 ஆகிய நாட்களில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல வழிதடங்களில் பயண வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு அதிகளவு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், கோயம்பேடு மற்றும் வடசென்னை பகுதிகளிலிருந்தும் பல்வேறு திசைகளுக்கு கூடுதல் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களுக்கும் இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 1,774 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விடுமுறை முடிவில் திரும்பும் பயணிகளுக்காக மார்ச் 22 அன்று கூடுதல் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்தால், சிரமமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

[youtube-feed feed=1]