சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்,  வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.   மேலும், கச்சா எண்ணை போக்குவரத்துக்கு உதவிகரமாக இருந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக,  இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என  ‘கெயில்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து,  இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  சிலிண்டருக்கு ரூ.60  உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் வணிக சிலிண்டர்களும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பல உணவகங்கள் விறகு அடுப்புகளை உபயோகப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  காஸ் தட்​டுப்​பாடு தொடர்​பாக துறைச் செயலர், அனைத்து மருத்​து​வக் கல்​லூரி டீன்​கள், இணை இயக்​குநர்​கள், துணை இயக்​குநர்​கள், அலு​வலர்​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது. இந்த வாரத்​துக்கு காஸ் தட்​டுப்​பாடு பிரச்​சினை இல்​லை. கடுமை​யான தட்​டுப்​பாடு வரும்​பட்​சத்​தில், இதற்கு மாற்று ஏற்​பா​டாக எலெக்ட்​ரிக் ஸ்டவ், விறகு அடுப்​பு​கள் போன்​றவற்றை தயார் நிலை​யில் வைக்க வேண்​டும்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்னதாக, சைதாப்​பேட்டை எம்​எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடி​யில், சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள காத்​திருப்​புக் கூடத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன்  திறந்து வைத்​தார்.  மேலும், முதல்​வர் மருத்​து​வக் காப்​பீட்டு திட்ட நிதி​யின் மூலம் இயன்​முறை பயிற்​றுநர் நியமிக்​கப்​பட்​டு, ரூ.1.50 லட்​சத்​தில் புதிய இயன்​முறை கருவி​களின் பயன்​பாடு, யோகா – இயற்கை மருத்​து​வப் பிரிவுக்கு ஒரு மருத்​து​வர் மற்​றும் ஒரு மருத்​துவ உதவி​யாள​ருடன் கூடிய சேவையை தொடங்கி வைத்​தார்.

[youtube-feed feed=1]