சென்னை: தமிழ்நாடு முழுவதும் மலேரியா, டெங்கு காய்ச்சல்  பரவி வரும் நிலையில், மாநிலம்  முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை கோவை  மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில்  சுகாதார சீர்கேடுகள் காரணமாக கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக  1. மலேரியா, 2. டெங்கு, 3. ஜிகா, 4. வெஸ்ட் நைல் எனப்படும் ஜாயின்ட் வலி, 5. சிக்குன்குனியா, 6. மஞ்சள் காய்ச்சல் எனப்படும் மஞ்சாள் காமாலைபோன்ற நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த நிலையில்,  சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த விஜய​ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில்,  கொசுக்களை தடுப்பது தொடர்பாக பொதுநல வழக்க  தாக்​கல் செய்​திருந்தார்.

அவரது மனு​வில், சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் சமீப​கால​மாக கொசுக்களின் உற்​பத்தி பன்​மடங்கு அதி​கரித்து வரு​கிறது. கொசுக்கடியால் குழந்​தைகளும், முதி​யோ​ரும் பெரிதும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். சாக்​கடைகள் மட்​டுமின்றி வீட்​டுக்​குள் தேங்கி கிடக்​கும் கழி​வு நீரிலும் கொசுக்​களின் உற்​பத்தி அதி​கரித்து டெங்கு, மலேரி​யா, சிக்​குன்​குனியா போன்ற நோய்​கள் பரவும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இதேநிலை​தான் தமிழகம் முழு​வதும் உள்​ளது.

எனவே, மழைநீர் வடி​கால்​கள், கழி​வுநீர் கால்​வாய்​கள், கட்​டு​மானப் பகு​தி​களில் தேங்​கிக் கிடக்​கும் கழி​வுநீரை முறை​யாக அகற்றி தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்​க​வும், வீரியமிக்க கொசுக்​களை அழிக்​க​வும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்​கும், சென்னை மாநக​ராட்​சிக்​கும் உத்​தர​விட வேண்​டும் என  கோரி​யிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடை​பெற்​றது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் கார்த்​திகை பாலன் ஆஜராகி, கொசு உற்​பத்​தி​யால் தமிழகத்​தில்​தான் அதி​க​மான பாதிப்​பு​கள் ஏற்​பட்​டுள்ளன என்​பது குறித்த புள்​ளி​விவரங்​களை சமர்ப்​பித்​தார்.

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத்தடுக்க என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து தமிழக அரசும், சென்​னை​யில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாக​மும் 3 வார காலத்தில்பதில் அளிக்க உத்தர​விட்ட நீதிப​தி​கள்​, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

[youtube-feed feed=1]