சென்னை: சென்னை மாநகராட்சியில் தொடரும் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
மண்டலம்-2, வார்டு-16 இல் இருக்கும் TPP சாலையில் 17 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் மற்றும் கம்பங்கள் பொருத்தும் பணிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. தமிழ்நாடு ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மைச் சட்டம் – 1998 மற்றும் விதிகள் 2000 சட்டம் முழுமையாக மீறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், தெரு விளக்கு ஒப்பந்தத்தை M/s Narayan & Co நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என முன்பே திட்டமிட்டு Pre – Fixed செய்து மோசடி செய்துள்ளது.
இதை கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யவில்லை.
உள்ளாட்சி முறை மன்ற நடுவதிலும் இந்த மோசடி செய்தது உறுதி செய்து ஒரு ஆண்டு ஆகியும் இது வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை, M/s Narayan & Co நிறுவனமும் Black List செய்யப்படவில்லை. PriyaRajan DMK
அறப்போர் இயக்கம், முதல் தகவல் அறிக்கை பதிய வலியுறுத்தி, ஆதாரங்களுடன் புகாரை – ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளது.
முழு தகவலை காண வீடியோவை கிளிக் செய்யுங்கள்
[youtube-feed feed=1]