சென்னை: டிட்வா புயல் குறித்து சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்து டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட ஆட்சிகள் உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
‘பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, டிட்வா புயல் காரணமாக, காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், கட்டுமான பணிகளில் உள்ள கிரேன்கள் அதிகமான உயரத்தை குறைந்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் காரணமாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் “டிட்வா” புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாடு நோக்கி திரும்பி வந்துகொண்டிருக்கிறது.
இன்று காலை 8:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென்கிழக்கே 170 கிமீ, காரைக்கால் 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீ வேகத்தில் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட ஆட்சிகள் உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலேசானை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிட்வா புயல் பாதிப்பு குறித்தும் மழை குறித்தும் குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனைகளை செய்யப்பட் டதாகவும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்பும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டோம் என கூறினார்.
இந்த புயலானது ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு புயல் வரும் என சொல்லி உள்ளார்கள் எனவும் சென்னைக்கு வராமல் சென்னைக்கு ஒரமாகவே இந்த புயல் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் என்பது 28 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 10 அணிகளை விமான குழுக்களாக கேட்டு உள்ளோம் என கூறினார்.

பொதுவாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தான் அதிக பாதிப்புகளை எற்படுத்தும் அங்கும் தொடர்ந்து அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். நாகையில் இரண்டு இடங்களில் அதிக மழை பெய்து உள்ளது.
நேற்று வரை 1 கோடியே 24 லட்சம் பேருக்கு டிட்வா புயல் குறித்து குறுச்செய்திகள் அனுப்பபட்டுள்ளது. புயல்களை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் குறுஞ்செய்தி மூலமாக எச்சரிக்கை அனுப்பி உள்ளோம் என தெரிவித்தார்.
இந்த டிட்வா புயலால் இதுவரை பெரிய அளவில் பாதிப்போ உயிரிழப்புகளோ எதுவும் இல்லை எனவும் 16 கால்நடைகள் இறந்துள்ளது எனவும்24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது எனவும் தற்போது வரை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டவர், குறிப்பாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்.
சென்னையை ஒட்டி புயல் செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம். தேவைப்பட்டால், மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம்.
காற்றோடு மழை பெய்யும் போது பாதிப்புகள் இருக்கக்கூடும் என்றவர், கடற்கரை பகுதிகளில் உள்ள படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கனமழை காரணமாக, பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், அந்த சேதம் தொடர்பாக 30-ந்தேதிக்கு பிறகு கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த புயலால் கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை என்றார்.
சென்னையில பல இடங்களில் நடைபெறும் கட்டுமான பணிகளில் உள்ள கிரேன்கள் அதிகமான உயரத்தில் இருப்பதை உயரத்தை குறைந்து வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கேட்டுக்கொண்டார்.