கோவை: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் அனாதையானா மூத்த தலைவர் தவெகவில் அடைக்கலம் தேடிய நிலையில், அடுத்த முதல்வர் விஜய்தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
50ஆண்டுகாலம் தன்னை வளர்த்து, செழிப்பாக்கிய கட்சிக்கு எதிராக செயல்பட்ட செங்கோட்டையன், அங்கிருந்து நீக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் தவெகவில் இணைந்து, பதவி பெற்ற நிலையில், வரும் 2026-ல் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

த.வெ.க.,வில் இணைந்து, மேற்கு மண்டல அமைப்பு செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், கோவை வந்த செங்கோட்டையனுக்கு, கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

தவெகவின் எந்த கொள்கை பிடித்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், எம்ஜிஆர் ஆட்சி தொடங்கியபோது இப்படித்தான் கேட்டார்கள் என்றும், அதாவது அண்ணாயிஸம் என்றால் என்ன என்று கேட்டதாகவும், அதற்கு, ஒழுகாத வீடு, கிழியாத உடை, ஆறாத சோறு என்று சொன்னார். அதேபோல், இன்று விஜய், எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரத்தில் உயர்த்தப்பட வேண்டும், எல்லோரும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றும் மனித நேயத்தோடு அறிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், இன்றைய அதிமுகவைத் தான் தான் விமர்சனம் செய்ததாகவும், அன்றைய ஆட்சியை, அதாவது எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை புனித ஆட்சி தான் நடைபெற்றதாகவும், அதற்குப் பின் தான் இந்த இரண்டு ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்று கூறியதாகவும் விளக்கமளித்தார்.
அவருக்கு பின்னால் மக்கள் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்த செங்கோட்டையன், 9 முறை தான் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும், அதில் 3 முறை வாக்கு கேட்காமலேயே மக்கள் வெற்றி பெற வைத்தார்கள் என்பதால், மக்கள் என் பின்னால் இல்லை என்று அவர் சொல்லலாம், ஆனால் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், ‘நான்‘ என்று ஒருவன் நினைத்தால், ‘தான்‘ என்று ஆண்டவன் காட்டிவிடுவார் என்று கூறிவிட்டுச் சென்றார் செங்கோட்டையன்.