சென்னை: டிசம்பர் 4ந்தேதி புதுச்சேரியில்  தவெக தலைவர்  விஜய் ரோடு ஷோவுக்கு  அனுமதி கேட்டு அம்மாநில  டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

வருகிற டிசம்பர் 5 தேதி நடிகர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் புதுச்சேரி காவல்துறை இயக்குனருக்கு கடிதம் அளித்துள்ளார்/

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 2026  ஏப்ரல் , மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் களமிறங்குவதாக அறிவித்தள்ள தவெக தலைவர் விஜய். தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் தொகுதிவாரியாக மக்கள் சந்திப்பு நடத்தி ஆதரவை கோரி வருகிறார். தமிழ்நாட்டில் அவரது மக்கள் சந்திப்பு நிகழ்வானது, கரூர் பகுதியில் நடைபெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்தனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் ரோடு ஷோவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.

இதைததொடர்ந்து,  கடந்த இருநாட்களுக்கு முன்பு  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் அரங்க நிகழ்ச்சியாகவே நடந்தது. இதில், 2 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், டிசம்பர் 5-ந் தேதி புதுச்சேரியில் சாலை வலமாக (ரோடு ஷோ) சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இதற்கு தடை இருந்தாலும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.

விஜய்யின் சாலை வலத்திற்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுதொடர்பான அந்த மனுவில் ,  எங்கள் கழகத் தலைவர் விஜய் அவர்கள் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம். தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வருகை பரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது கீழ் கண்ட இடத்தில் ஒலிப் பெருக்கியின் மூலமாக உரையாட உள்ளார் ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி எங்கள் கழகத் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாள்: 05.12.2025, வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

தலைவர் உரையாற்றும் இடம்: உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.