சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் (SIR) மேற்கொள்ளப்படும் நிலையில். அதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (S.I.R) எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. மனு தாக்கல் செய்தார். மனு விவரம் வெளியாகி உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பீகாரில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஆர் பணிகள் இன்றுமுதல் தொடங்க உள்ளன. இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பி தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நவ.02 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், “ஜனநாயக விரோத – சட்ட விரோத S.I.R. முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும்!” என அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்து, தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி S.I.R எதிராக அவம்பர் 3ந்தேதி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், “பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R) செய்தபோது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதற்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு மேற்கொள்வது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை போன்றவை வருவதால், வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படும். இதனால் அவர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.