சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள  645 இடங்களுக்கான குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு  நாளை  மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.  இந்த இடங்களுக்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இதையொட்டி தேர்வர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை  தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைநடக்கிறது. தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும் சென்னையில் மட்டும் 188 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில், 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணிகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு  தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, இந்த  காலி பணியிடங்களை நிரம்புவதற்கான, அறிவிப்பை,  அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2025  ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது. இதையடுத்து விண்ணப்பதிவுகள் தொடங்கியது.  இந்த  645 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.

விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.